இன்று முதல் சென்னையில் தளர்வுகள் ! என்னென்ன தளர்வுகள் ?

இன்று முதல் சென்னையில் தளர்வுகள் ! என்னென்ன தளர்வுகள் ?

முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் சென்னையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது.

அங்கு முழு ஊரடங்கு, முடிவடைந்த  நிலையில், சென்னையில் மட்டும் இன்று ( ஜூலை-6 -ஆம் தேதி )முதல் மேலும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  •  டீ கடைகளில் பார்சலில் மட்டும்  காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • காய்கறிக்கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Join our channel google news Youtube