வெளியானது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் முடிவுகள்

வெளியானது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் முடிவுகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 8ஆம் தேதி நடந்த தேர்வில் 1.65 லட்சம் பேர் பங்கேற்றனர்.கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு  நீதிமன்ற வழக்குகள் காரணமாக  நடைபெறவில்லை.எனவே இந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

ஜூன்   9-ஆம் தேதியில்  இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1-5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராகவும்,இரண்டாம் தாளுக்கானத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1-8 வகுப்புவரை ஆசிரியராக பணியாற்ற முடியும்.

தற்போது  முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Join our channel google news Youtube