ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமல்ல – தமிழக அரசு பதில்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு துப்பாக்கி சூடு காரணமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடியில் எவ்வித மாசும் ஏற்படவில்லை என்று வேதாந்தா தரப்பு கூறி இருந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு எவ்வித கொள்கை முடிவும் எடுக்காமல் மக்களை சமாதான படுத்தவே மூடியுள்ளதாக வாதிட்டனர்.

இந்நிலையில், அந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் , தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடவில்லை என்றும் ஆலை நிர்வாகம் சுற்றுசூழல் சார்ந்த நிபந்தனைகளை மீறியதாலே ஆலை மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.