கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் தீ விபத்து.!

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பட்டாசு குடோன்களில் உராய்வுகள் மற்றும் மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் கமலா பாஷ் என்பவர் சாமல்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக இந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர்.

author avatar
Rebekal