நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்தது – தயாநிதி மாறன்

நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்தது என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மக்களவையில்  தயாநிதி மாறன் எம்.பி. பேசினார்.அப்போது அவர் கூறுகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை இல்லை,நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்தது, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.
குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது;.அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.