கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, fefsi தொழிலாளர்களுக்கு உதவுமாறு சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, பல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ஜெயம் ரவி ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.