டிக்டாக், ஹெலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

இந்தியாவில் உள்ள பட்டித்தொட்டி முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்த டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் இடமாக டிக்டாக் உள்ளது. இளைஞர்கள் தங்களின் விடீயோக்களை டிக்டாக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சு என்ற அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறுகையில், இந்திய பண்பாடுக்கு எதிராக டிக்டாக்கில் பெண்கள் ஆபாசமாக நடனமாடி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்கள்.

இதுகுறித்து 21 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிலளிக்காவிட்டால் அச்செயலியை தடை செய்யமாறு மத்திய அரசு கூறியது.