திருவாரூரில் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியைபோல் திமுகவிற்கு பயம் …!தினகரன்

இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி செய்கிறது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர்  தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலாளர்  தினகரன் கூறுகையில், அமமுக வெற்றி பெறும் என்ற பயத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின், முரணான தகவலை தெரிவித்து வருகிறார்.திருவாரூர் தேர்தல் நடக்க வேண்டும் என்பது தான் அமமுகவின் எண்ணம் ஆகும்.திருவாரூரில் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியைபோல் திமுக அச்சப்படுகிறது .இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி செய்கிறது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர்  தினகரன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment