அச்சம் என்பது மடமையடா படத்தின் நடிகையின் அச்சம் காரணம் இதுவா ?

தமிழ் சினிமாவில் நடிகர்  சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அவர் தற்போது குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

மஞ்சிமாவிற்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் “நான் பொது இடத்தில் ரசிகர்களை கண்டால் முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிடுவேன்” என கூறியுள்ளார்.

“நான் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்டவர். ரசிகர்கள் யாராவது என்னை பார்த்து செல்பி எடுக்க அணுகுவது தெரிந்தால் அவர்களை பார்க்காதது போல முகத்தை திருப்பிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவேன்” என மஞ்சிமா கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment