இன்று மதியம் முதலமைச்சரை சந்திக்க உள்ள பாத்திமாவின் தந்தை..?!

இன்று மதியம் முதலமைச்சரை சந்திக்க உள்ள பாத்திமாவின் தந்தை..?!

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சார்ந்த பாத்திமா லத்தீப்.இவர் சென்னையில் உள்ள ஐஐடி-யில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 08-ம் தேதி இரவு 12 மணிக்கு பாத்திமா லத்தீப் பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக நேற்று  சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறுகையில் ,மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.
அனுபவம் உள்ள அதிகாரிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறினார்.இந்நிலையில் இன்று மதியம் பாத்திமா லத்தீப் தந்தை முதலமைச்சர் பழனிச்சாமி யை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube