தந்தை-மகன் உயிரிழப்பு: வழக்கை விசாரிக்க தூத்துக்குடி வந்தடைந்த சிபிஐ அதிகாரிகள்!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் விசாரணையை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி வந்தடைந்தன.

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானம் மூலம் 8 பேர் கொண்ட குழுவினர், தூத்துக்குடி புறப்பட்டனர். மதுரையில் இருந்து தூத்துக்குடியில் மூன்று கார்கள் மூலம் புறப்பட்ட அவர்கள், தற்பொழுது தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தடைந்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவையை சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் ஒப்படைக்கவுள்ளார்.