மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி என் அப்பா கொடுத்தார் !ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது .இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் டெல்லியை பொருத்தவரை அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகின்றது.

தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் போட்டியிடுகிறார்.உதய் ஜாகர் கூறுகையில்,கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் என் அப்பா அரசியலில் இணைந்தார்.மக்களவை தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது. அதற்கு நானே சாட்சி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment