#BREAKING : தந்தை -மகன் வழக்கு ! ஆவணங்கள் ஒப்படைப்பு

தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் டிஐஜி பிரவீண்குமாரிடம்  மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஓப்படைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன்  சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில்  டிஐஜி பிரவீண்குமாரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தமிழ்ச்செல்வி நீதிமன்ற உத்தரவின்படி மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஓப்படைத்தார்.