மோடிக்கு கோவில் கட்டி தினமும் பாலாபிஷேகம் செய்து வரும் விவசாயி.!

  • எரகுடி சேர்ந்த விவசாயி சங்கர் சிறுவயது இருந்து பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகர்.
  • பிரதமர் மோடிக்கு தனது சொந்த நிலத்தில் கோவில் கட்டி சிலை வைத்து தினமும் பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி சேர்ந்தவர் சங்கர் (50) .இவரது மனைவி பானுமதி (40) .இவர்களுக்கு  தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா என்ற  2 மகன்களும் உள்ளனர்.

விவசாயி சங்கர் சிறுவயது இருந்து பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதனால் பிரதமர் மோடிக்கு தனது சொந்த நிலத்தில் கோவில் கட்டிசிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பி உள்ளார்.

இதை தொடர்ந்து சங்கர் தனது தோட்டத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி சிலைக்கு தினமும் பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார். இது குறித்து சங்கர் கூறுகையில் ,பிரதமர் மோடிக்கு யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன்.

விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததல் கோவில் கட்ட முடியவில்லை. தற்போது, விவசாயத்தில் கிடைத்த பணத்தை வைத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறினார்.

author avatar
murugan