ரசிகர்கள் தூர் வாரும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தர்பார் படம் நன்றாக வந்துள்ளதாகவும், ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தனது ரசிகர்கள் குளங்களை தூர் வாரும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.