விஜயை அப்படி பார்க்கும் போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுப்பார்கள் -அமைச்சர் ஜெயக்குமார்

விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில்,அ.தி.மு.க. ஜனநாயகத்துடன் செயல்பட்டு வருகிறது, வேட்பாளர் தேர்வில் தாமதம் இல்லை. உரிய நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

படத்தில் நடிகர் விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது.சினிமா மூலம் எம் ஜிஆர் போல நல்ல கருத்துகளை பரப்பினால் மக்கள் ஆதரவளிப்பார்கள் சினிமா மூலம் நடிகர்கள் நல்ல கருத்துகளை பரப்ப வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.