ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம்

ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல்  30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்  எச்சரிக்கை விடுத்துள்ளது .ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Leave a Comment