தமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி!

தமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி!

தமிழில் இவன் வேற மாதிரி எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல தமிழ் வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சுரபி. அதன் பின்பு அவர் தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்தார். இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சுனி  அவர்களின் இயக்கத்தில் இவர் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப்படம் பெங்களூருவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நடிகை சுரபி தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக நடிக்கிறார். வருகின்ற மார்ச் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்திற்கான கதாநாயகன் மற்றும் துணை நடிகர்கள் ஆகியவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை கேபிஎன் புரோடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube