படப்பிடிப்பின் போது படுகாயம் அடைந்த பிரபல நடிகர்! படபிடிப்பு நிறுத்தம்!

படப்பிடிப்பின் போது படுகாயம் அடைந்த பிரபல நடிகர்! படபிடிப்பு நிறுத்தம்!

பிரபல தெலுங்கு நடிகரான நாக சவுரியா, தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ரமண தேஜா இயக்கத்தில், அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஆந்திராவின் அரக்குவேலி என்ற இடத்தில நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சியின் போது, டூப் போடாமல் தானே நடித்து வந்தார். இதனையடுத்து, நாக சவுரியா எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியதால், இவரது இடது கால் மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரை சோதித்த மருத்துவர்கள், ஒரு மாதம் ஒய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube