அரசு மருத்துவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி ?

 அரசு மருத்துவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி ?

அரசு மருத்துவர்களுடன்  அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால்  அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube