#IPL2020: சிஎஸ்கே திணறல்… 3 ரன்னில் 4 விக்கெட்..!

#IPL2020: சிஎஸ்கே திணறல்… 3 ரன்னில் 4 விக்கெட்..!

இன்று நடைபெறும் 41 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் ,டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆனால், ஆட்டம் தொடக்கத்திலே ருதுராஜ் ரன் எடுக்காமல் வெளியேற பின்னர், இறங்கிய அம்பதி ராயுடு 2 ரன் மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய முதல் பந்திலே ஜெகதீசன் வெளியேறினார். பின்னர், டு பிளெசிஸ் 1 ரன் எடுத்து வெளியேற இறுதியாக சென்னை அணி  2.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 3 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube