அட வெங்காயத்திற்கு வந்த வாழ்வா? புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்!

புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்.

பருவமழை காரணமாக, வெங்காயத்தின் வரத்து குறைந்த நிலையில், வெங்காயவிலை வானை முட்டும் அளவுக்கு கிடுகிடு என உயர தொடங்கியது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூ செண்டு போல் அலங்கரித்து, மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.