பேச்சுவார்த்தையில் தோல்வி …!தண்ணீர் லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும்…!

தண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று  அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு செய்தனர்.
 
தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.அதேபோல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே வணிக வளாகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தால் டீ கடை, ஹோட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருவதாக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.
 
Image result for velumani
இதனால்  தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிஆலோசனையில் ஈடுபட்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டார்.சென்னையில்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.
முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,வேலைநிறுத்தம் தொடர்பாக தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும்.  இன்றைக்குள் சுமூக தீர்வு எட்டப்படும்.தண்ணீர் லாரி உரிமையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.கேன் குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.பேச்சுவார்த்தையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதன் பின்னர் இன்று மாலை  பேச்சு வார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று  அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை.எனவே தண்ணீர்  லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதேபோல்  தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து கேன் குடிநீர் நிறுவன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment