ஜியோ பங்குகளை 43,574 கோடி ரூபாய்க்கு வாங்கிய பேஸ்புக்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்9.9 சதவீத பங்குகளை இந்திய மதிப்பில் 43,574 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது முக்கிய பணக்காரர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் முகேஷ் அம்பானி. அவரின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் படு வேகமாக தனது தடத்தை பதித்து வருகிறது. இதனால் உலக பணக்காரர்கள் வரிசையிலும் முகேஷ் அம்பானி முக்கிய இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது என்கிற செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 9.9 சதவீத பங்குகளை இந்திய மதிப்பில் 43,574 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.