பல கோடி பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் கசிந்துள்ளன! வெளியான பகீர் ரிபோர்ட்!

உலகம் முழுவதும் அதிகம் இணையதளவாசிகளால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள பக்கம் பேஸ்புக். இந்த இணைய தள பக்கத்தை பயன்படுத்தி  பல கோடி கணக்கானவர்கள் தங்களது நட்பு வட்டாரத்தை பெருக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Tech Crunch நிறுவனம் அண்மையில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதாவது பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதாகவும், அதன் காரணமாக  கோடிகணக்கான பயணர்களின்  விவரங்கள் கசிந்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த 11 கோடி பேரின் தகவல்களும், இங்கிலாந்தை சேர்ந்த 1.8 லட்சம் பயனர்களின் தகவல்களும், வியட்நாமை சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் ஐடி, முகவரியுடன் சேர்த்து பயனர்களின் மொபைல் நம்பரும் வெளியாகியுள்ளதாம்.  மேலும், பல முக்கிய தகவல்களும், அதாவது பயனர்கள் இருக்குமிடம் முதற்கொண்டு கசிந்துள்ளதாம். இதனால் தேவையில்லாத அழைப்புகளும், விளம்பரங்களும் பயனர்களின் போனுக்கு வந்த அவர்களை தொல்லை செய்கிறதாம். இதன் மூலம் பயணிகளின் முக்கிய விவரங்களை அவர்களின் மொபைல் நம்பர் மூலமாக எளிதாக திருடி விட முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.