நேருக்குநேர் கார்- லாரி மோதல்! 9 மாணவர்கள் பலி !

மகாராஷ்டிரா  மாநிலம் புனேவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடம்வாக் வஸ்தி பகுதியில் அதிகாலை 1.30 மணியளவில் ஒரு  காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் நடத்திய  முதல் கட்ட விசாரணையில் அந்த கார்  நோ என்டிரி பாதையில் வந்ததாகவும், அந்த பாதையில் எதிரே வந்த லாரி மீது கார் மோதிக்கொண்டது.

இதைத்தொடர்ந்து அந்த காரில்பயணம் செய்த டிரைவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ராய்கார் பகுதியிலிருந்து சொந்த ஊரான யாவதுக்கு  சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் அனைவருமே 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என கூறினார்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.