கூடன்குளம் அணுமின் நிலையம் வளாகம் தீவிர கண்காணிப்பு…!!

இந்தியா எல்லை பகுதியில் தொடர் பதற்றம் ஏற்பட்டு வருகின்றது

நெல்லையில் உள்ள இந்நிய விண்வெளி ஆராய்ச்சி மைய மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் வளாகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்திய பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதி முழுவதும் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் பதற்றம் நிலவி வருகின்றது.இந்நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இருக்கும்  இந்நிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்தும வளாகம் மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதுகாப்பு பணியில், சுமார் 350க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment