கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது.
தமிழக அரசு அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் பின்வருமாறு,
- கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத்தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தவும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.
- மீன்பிடி மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களுக்கும் மாத தவணை செலுத்த 3 மாத கால அவகாசம்.
- வீட்டு வசதி துறைக்கு செலுத்தவேண்டிய கடன்தொகையும் 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்ற நிறுவனங்களும், சிப்காட் நிறுவனத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பராமரிப்பு தொகையையும் ஜூன் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதும்.
- தமிழ்நாடு சிறு குறு தொழில்களுக்காக 200 கோடி கடனுதவி வழங்கப்படும்.
- தமிழ்நாடு தொழில்முனைவோர் சங்கத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனகளும் தங்கள் மாத தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.