பயிர்க்கடன், சொத்துவரி போன்றவைகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. 

தமிழக அரசு அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் பின்வருமாறு,

  • கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத்தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தவும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு. 
  • மீன்பிடி மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களுக்கும் மாத தவணை செலுத்த 3 மாத கால அவகாசம். 
  • வீட்டு வசதி துறைக்கு செலுத்தவேண்டிய கடன்தொகையும் 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 
  • சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்ற நிறுவனங்களும், சிப்காட் நிறுவனத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பராமரிப்பு தொகையையும் ஜூன் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதும்.  
  • தமிழ்நாடு சிறு குறு தொழில்களுக்காக 200 கோடி கடனுதவி வழங்கப்படும்.  
  • தமிழ்நாடு தொழில்முனைவோர் சங்கத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனகளும் தங்கள் மாத தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.