இன்றுடன் முடிவடைய இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிப்பு

இன்றுடன் முடிவடைய இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிப்பு

சில முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ள காரணத்தால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26ஆம் தேதி(இன்று ) வரை நடைபெரும்  என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால் கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி  கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கையை ஏற்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு  வெளியிட்டார்.அதில்  ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்  நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

Join our channel google news Youtube