2000 துப்பரவு தொழிலார்களின் பணி காலம் நீட்டிப்பு .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அந்தந்த மாநிலத்தில்  கொரோனா தடுப்புக்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 மருத்துவர்கள் ,செவிலியர்கள்  , காவல்துறை மற்றும் துப்பரவு தொழிலார்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் பஞ்சாப்  மாநிலத்தில் இன்றுடன்  ஓய்வு பெற உள்ள 2000 துப்பரவு தொழிலார்களின் பணியை மேலும் 3 மாதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நீடித்துள்ளார். பஞ்சாப்  மாநிலத்தில் கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஓய்வுபெறும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை 2 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan