Breaking: தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்!

தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவை கனமழை புரட்டி எடுத்துள்ளது. கனமழையால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளபாதிப்பில் இறந்தவர்களுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பெரும் சேதத்தை சந்தித்துள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.