கொரோனா ஊரடங்கால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான புதிய சலுகை!

ஜியோ தொலைத்தொடர்ப்பு நிறுவனம் கொரோனா ஊரடங்கில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுக படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்து வரும் நிலையில், தற்போது பலரும் தங்களது சேவைகள் மற்றும்வேலைகளை வீட்டிலிருந்தே இணையதளம் மூலமாக செய்து வருகின்றனர். 

இதற்கு இணையதளம் அதிகம்  தேவைப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது முன்னிடத்தில் இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமாகிய ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது. 

அதன் படி, 151 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 ஜிபி டேட்டாவும், 201 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டாவும், 251 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. மேலும், இதற்க்கு ஒரு நாளுக்கு இவ்வளவு என ஜிபி கணக்கு கிடையாது. 

அது மட்டுமல்லாமல், வருடம் முழுவதற்குமான சேவையையும் ஜியோ அறிமுகமப்படுத்தியுள்ளது. அதன் படி, 2 ஆயிரத்து 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சலுகை பலராலும் வரவேற்கப்படுகிறது. 

author avatar
Rebekal