இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் : நடிகை ப்ரியா ஆனந்த்

நடிகை ப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் வாமனன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து வணக்கம் சென்னை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தற்கு பிறகு, இவர்கள் இருவரும் இணைந்து சுமோ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரியா ஆனந்த் இப்படம் குறித்து பேசுகையில், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்றும், இதன் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் என்றும், ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.