என்னுடன் இப்போது அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்! ஸ்ரீதேவி மகள் ஆதங்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகை ஸ்ரீதேவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர். இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது திரையுலக வட்டாரங்களில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நடிகை ஜான்வி கபூர், தனது தாயின் இரண்டாவது நினைவு நாளன்று தனது கருப்பு வெள்ளை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணருகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் தனது தாய் இறப்பு குறித்து கூறுகையில், படப்பிடிப்பு, சுற்றுலா, தோழிகளுடன் ஊர் சுற்றுதல்  என பரபரப்பாக இருந்தாலும், என் அம்மா இப்போது இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன். அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.