ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட யூரோ 2020 கால்பந்து போட்டிகள்!

ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட யூரோ 2020 கால்பந்து போட்டிகள்!

கால்பந்து தொடரில் பெரிய போட்டியாக கருதப்படுவது, யூரோ 2020 தொடர். 24 அணிகள் விளையாடும் இந்த தொடர், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற 12 நாடுகளில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்தாண்டு ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 11ஆம் நிறைவுபெறுகிறது. 

இப்போட்டிக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டுருந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வரும் காரணத்தினால், இந்த கால்பந்து தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக யூஇஎப்ஏ (UEFA) அறிவித்தனர். மேலும், இந்த போட்டிகள் ஜூன் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, ஜூலை 11ஆம் தேதி முடியும் எனவும் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் யூஇஎப்ஏ வெளியிட்ட இந்த செய்தியால் கால்பந்து ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Join our channel google news Youtube