பல்சர், கேடிஎம் பைக்குகளை விட அதிக திறன் கொண்டுள்ள எல்க்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!!

பெட்ரோல் டீசல் விலையின் கிடுகிடு உயர்வால், மக்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் மீது தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர்.

இதன் விளைவாக தற்போது பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் என்ற நிறுவனம் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை  விற்பனைக்கு இறக்கியுள்ளது.

இந்நிறுவனம் ஏத்தர் 340, ஏத்தர் 450 என இரு விதமான ஸ்மார்ட் ஸ்கூட்டர்களை சந்தையில் களமிறக்கியுள்ளது.

இந்த ஸ்கூட்டரை 1 மணிநேரம் சார்ஜ் செய்தால் அது 80% சார்ஜ் ஆகிவிடும். இந்த ஸ்கூட்டர்களில், BLDC (brushless direct current) எனும் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்  ஏத்தர் 340 இல் 4.4 kw (5.9 பிஎஸ்) பவரையும், ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 பிஎஸ்) பவரையும் வழங்கும்.

ஏத்தர் 340 ஸ்கூட்டர் 20nm டார்க் திறனையும், ஏத்தர் 450 ஸ்கூட்டர் 20.1nm டார்க் திறனையும் வெளிபடுத்தும் இது டியூக் 200, பல்சர் 220 வெளிபடுத்தும் டார்க் திறனைவிட அதிகம்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment