ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரகுபதிநாயகன் பாளையத்தில் தொழிலதிபராக இருக்கிறார் ராஜா. இவர் அதே பகுதியில் கெமிக்கல் ஆலை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் தான் 62 சவரன் நகைகளை திருட்டு கும்பல் ஒன்று திருடியுள்ளது.
திருட்டு நடந்த இரவு, அனைவரும் நன்றாக தூக்கியுள்ளனர். வீட்டில் நுழைய முதலில் வீட்டில் இருந்த நாயை அடித்துள்ளனர். வீட்டில் சிசிடிவி காமிரா இல்லாததை தங்களுக்கு சாதகமாக்கி உள்ளே நுழைந்துள்ளனர். அனைவரும் நன்றாக தூங்குவது அறிந்து, ஈசியாக 62 சவரன் நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்றுள்ளனர்.
பிறகு கண்விழித்து பார்த்த வீட்டினர், பீரோ கதவை திறந்து நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.