தேசிய அளவில் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும்.! பீகார் முதல்வர் வலியுறுத்தல்.!

  • பிகாரில் மது இல்லாத நாடு என்ற கருத்தரங்கத்தில் மது ஒழிப்பை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தில் மது இல்லாத நாடு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது மது ஒழிப்பை ஒரு சில மாநிலங்களில் மட்டும் இருக்குறது. அதுமட்டுமல்லாமல் இதை நாடு முழுவதும் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும். ஏனெனில் இது மகாத்மா காந்தி பிறந்த மண்ணு, மதுவால் பல உயிரிழப்புகள் நடந்திருக்கிறது என்றும், கடந்த களங்களில் இந்தியாவில் மது ஒழிப்பு  அமலில் இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அதை ரத்து செய்ததாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூரால் மது அதிகமாக திணிக்கப்பட்டதாவும், மதுவை ஒழிக்க தான் 2011 முதல் திட்டமிட்டு இறுதியாக 2016-ம் ஆண்டு அதை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார். கடந்த 2016 முதல் இன்றுவரை பீகாரில் மதுவிற்கு தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்