மீண்டும் என்ன பிரச்சனை இந்த படத்திற்கு?! நாளையாவது வெளியாகுமா எனை நோக்கி பாயும் தோட்டா?

தனுஷின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தற்போது வரை எனை நோக்கி பாயும் தோட்டா சிக்கலில் ரிலீஸாமல் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் திடீரென்று சில காரணங்களால் மீண்டும் தள்ளிப் போனது.

இதற்க்கு காரணம் வினியோகஸ்தர் ராமராஜன் மேலுள்ள நீதிமன்ற வழக்கு தான். அவர் ஏற்கனவே வெளியிட்ட பாகுபலி, சிந்துபாத் ஆகிய படங்களின் நஷ்ட பாக்கி இன்னும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கு நீதிமன்றம் சென்றுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடந்து முடிந்து அதற்கு பின்னர் இவர் என்ஓசி (Non Objection Certificate) சர்டிபிகேட் கொடுத்தால் மட்டுமே படம் வெளியாகும். அதன் பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.

மற்ற விநியோகிஸ்தர்கள் போல அவரும்   NOC சர்டிபிகேட் கொடுத்து விட்டால் படம் நாளை கூட வெளியாக அதிக வாய்ப்புள்ளது.  அல்லது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.