என்னது படத்தை பாதியிலேயே நிறுத்திடாங்களா…? இப்பிடி பண்ணிட்டாங்களே…! ..!பிரபல இயக்குனர் குற்றசாட்டு.!!!!

GT. நந்து இயக்குனராக இருந்த கெட்டவன் படமானது, படம் நடிக்க ஆரம்பித்து பாதியிலே  நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் நந்து ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார்.
இப்பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, அவர் ஆரம்பத்தில் சிம்புவிடம் கதை சொன்ன பின்பு, ஜீவா பரத் ஆகியோரிடம் கதை சொன்னாராம். அதன் பின் சிம்பு நடிக்க ஒப்புக்கொள்ளாததால் தனுஷிடம் கதை சொல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் சிம்பு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்க்கான பணிகள் துவங்கிய நிலையில், தனுஷ் சிம்புவிற்கு போன் செய்து ” நீ கதை வேண்டாம் என சொன்னதும் அவர் என்னிடம் கதை சொல்ல வருகிறார். இப்படி நன்றி கேட்டு இருப்பவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறாய் ? என கேட்டுள்ளார். இதனால் சிம்புவுக்கும் இயக்குனருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டது. இது படத்தை பாதியில் நிறுத்த காரணம் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.
SOURCE : TAMILCINEBAR.COM

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment