சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து !

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து !

இன்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி  பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டை  இழந்து 241 ரன்கள் குவித்தனர். பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்தனர்.

இதனால் இப்போட்டி சமநிலையில் முடிந்தது. பின்னர் சூப்பர் நடத்தப்பட்டது.அதில் ஜோஸ் பட்லர் , பென் ஸ்டோக்ஸ் இருவரும் களமிங்கினர். இங்கிலாந்து அணி 6 பந்தில் 15 ரன்கள் குவித்தனர்.

பின்னர் 16 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் குப்டில் ,ஜேம்ஸ் நீஷம் இருவரும் களமிங்கினர். இறுதியாக  நியூஸிலாந்து அணி 6 பந்தில் 15 ரன்கள் அடித்ததன் மூலம் மீண்டும் போட்டி டை ஆனது. இதனால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்ததால்  இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து  அணி உலகக் கோப்பையை முத்தமிட்டது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube