காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு ! நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இந்த நிலையில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது .இந்த மனு தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றகாவல் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.