இன்று முடிவடைகிறது ! சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தற்போது அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.இன்றுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.