தனது ஆசையை நிறைவேற்ற சர்க்கஸை விட்டு தப்பித்த குறும்புக்கார தம்பதி யானைகள்.!

  • ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் இருந்து கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ) என்ற இரு யானைகள் தப்பித்துள்ளது.
  • அந்த இரு யானைகளும், சர்க்கஸை விட்டு வெளியேறி. அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது. பின்னர் சர்க்கஸ் ஊழியர்கள் கயிறு கட்டி, அந்த யானையை இழுத்துச் சென்றனர். 

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் அடைத்து வைக்கப்பட்டு மனிதர்களின் சொல் பேச்சு கேட்கும் படி வளர்க்கபட்ட வரும் கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ) என்ற இரு யானைகள் குறும்புக்கார தம்பதி யானைகள் என்று சொல்லப்படுகிறது.
கர்லா மற்றும் ரன்னி வெளி உலகை சுற்றி பார்க்க நினைத்து சர்க்கஸை விட்டு வெளியேற முடிவு செய்து, உடனே அங்கிருந்து தப்பித்துள்ளது. பிறகு செய்வதறியாது மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், அந்த இரு யானைகளும், சர்க்கஸை விட்டு வெளியேறி. அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது. மேலும் அப்பகுதியில் பனிப்பொழிவு இருந்ததால், அந்த பகுதி சுற்றி வெறும் பனிகுவியல்கள் இருந்தன. இதில் பெண் யானை அங்கு குவிந்து கிடந்த பனிக்குவியலை பார்த்ததும் ஓடிச் சென்று விளையாட ஆரம்பித்துவிட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சர்க்கஸ் ஊழியர்கள் கர்லா மற்றும் ரன்னியை பிடிக்க முற்பட்டனர். அதில் ஒரு யானை பனிக்குவியல்களில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அதனை அங்கு விட்டு வர மனமில்லை என்றும் குறிப்பிட்டனர்.

இதனிடையே சர்க்கஸ் ஊழியர்கள் இரு யானைகளையும் கயிறு கட்டி, இழுத்துச் சென்றனர். பின்னர் இரு யானைகளும் சர்க்கஸில் மீண்டும் வழக்கம்போல் அடைக்கப்பட்டது. இந்நிலையில், மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் பல ஆசைகள் கொண்டிருக்கும் என்று இந்த நிகழ்வின் மூலம் தெரிய வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்