கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் பெறப்பட்டது …!திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் 

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் பெறப்பட்டது என்று  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்  தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த விழாவில் மின்சாரம் திருடப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும், இதற்க்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Image result for திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்
இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் பெறப்பட்டது .கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களங்கம் ஏற்படுத்த அமைச்சர் ஜெயக்குமார் முயற்சிக்கிறார் என்றும்  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment