தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம்

தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம்

தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக  அமோக வெற்றி பெற்றது.


இந்த நிலையில் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரமாகும். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்ற. மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Join our channel google news Youtube