ELECTION BREAKING : அரக்கோணத்தில்  3 வது சுற்றின் முடிவுகள் விபரம் வெளியானது

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

அதன் படி அரக்கோணத்தில்  3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகின்றது.3 சுற்று முடிவில் அரக்கோணத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் 94,864 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அதிமுக கூட்டணியோடு பாமக சார்பில் போட்டியிட்ட மூர்த்தி 54,210 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட பார்த்திபன்  10,159 வாக்குகள் பெற்றுள்ளார்.  நாதக சார்பில் போட்டியிட்ட பாவேந்தன் 3,591 வாக்குகள் பெற்றுள்ளார். மநீம  சார்பில் போட்டியிட்ட  ராஜேந்திரன் 2,401 வாக்குகள் பெற்றுள்ளார்.

அரக்கோணத்தில்  3 சுற்றுகள் முடிவில் தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருகிறது

 

author avatar
kavitha

Leave a Comment