ELECTION BREAKING: மயிலாடுதுறையில் 2வது சுற்றின் முடிவுகள் வெளியானது முன்னிலையில் திமுக

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

இதில் மயிலாடுதுறையில் 2 சுற்றாக வாக்கு எண்ணிகை எண்ணப்பட்டு வந்தது. அதன் படி 2 வது சுற்று முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

2  சுற்றுகளின் முடிவில்  திமுக சார்பில் போட்டியிட்ட ராமலிங்கம்  55,046 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக  சார்பில் போட்டியிட்ட ஆசைமணி  34,497 வாக்குகள் பெற்றுள்ளார்.அமமுக சார்பில் போட்டியிட்ட செந்தமிழன்  6,905 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக  சார்பில் போட்டியிட்ட சுபாஷினி  2,895 வாக்குகள் பெற்றுள்ளார்.  மநீம சார்பில் போட்டியிட்ட  ரிஃபாயுதீன் 714 வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டு சுற்று முடிவில் தொடர்ந்து திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

author avatar
kavitha

Leave a Comment