ELECTION BREAKING: விழுப்புரம் 5வது சுற்றின் முடிவுகள் வெளியானது

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

இதில் விழுப்புரம் தொகுதியில் 5  சுற்றாக  வாக்கு எண்ணிகை எண்ணப்பட்டு வந்தது. அதன் படி 5 வது சுற்று முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியோடு விசிக சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 1,68,592 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

அதிமுக கூட்டணியோடு பாமக சார்பில் போட்டியிட்ட  வடிவேல் ராவணன் 1,29,802  வாக்குகள் பெற்று உள்ளார்.

அமமுக சார்பில் போட்டியிட்ட வானூர் கனபதி  18,821 வாக்குகள் பெற்று உள்ளார் நாதக சார்பில் போட்டியிட்ட பிரகலதா  6,923 வாக்குகள் பெற்று உள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட பொய்யாமொழி 2353 வாக்குகள் பெற்று உள்ளார்.

இந்நிலையில் விழுப்புரத்தில்  திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

author avatar
kavitha

Leave a Comment