மாநகராட்சி,நகராட்சி தேர்தல் – தேர்தல் ஆணையர் பதில் அளிக்க உத்தரவு

  • மாநகராட்சி,நகராட்சி ஆகியவற்றிக்கு 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 
  • மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

நீண்ட நாட்களாக தமிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல்  நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் மாநகராட்சி,நகராட்சி ஆகியவற்றிக்கு 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் எனபவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.அப்பொழுது அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதில் ,முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்  என்றும் பின்னர் மாநகராட்சி,நகராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியது.மேலும்  தமிழக தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை.